தமிழ் இலக்கிய பேரவை
நோக்கம்:
மாணவர்களுக்கிடையே நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு சேர்த்தல். தமிழ் பண்பாட்டோடு தொடர்புடைய தமிழ் மொழியின் மேன்மையை பறைசாற்றுதல்,மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துதல் போன்ற உயரிய நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதே தமிழ் மன்றம்.
செயல்பாடுகள்:
- தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகம் -“தமிழ்மொழியால் இனித்த இலக்கியங்கள்"
- தமிழ் மொழி உரையாடலை ஊக்குவிக்கும் வகையில் - "தமிழ் மணம் கமழும் பட்டிமன்றம்"
- புதிய தமிழ் சொற்களை கற்கும் நோக்கில் - “சொல்லோடு விளையாடு"
- தங்குதடையின்றி தமிழ் பேச -"தமிழ் அருவி"
- வள்ளுவரின் கருத்துக்களை மாணவர்கள் அறிந்து அதன்படி நடக்க - “வாழ்வு சிறக்க வழிகாட்டும் வள்ளுவர்"
- தமிழ் மொழி வழி ஆங்கிலம் கற்க "தமிழோடு கை கோர்த்து உலகோடு உறவாடு"
- கற்பனை வளத்தை மேம்படுத்த “தாய்மொழியில் கவிதைகள்"